இது காங்கிரஸ் ஸ்டைல்: வேட்பாளர் தேர்வுக்கு அனைத்து கோஷ்டி குழுக்கள் அமைப்பு
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களிடம்நேர்காணல் நடத்த 30 பேர் அடங்கிய 6 குழுக்களை அமைத்துள்ளது தமிழக காங்கிரஸ்.
எல்லா கட்சிகளிலும் ஒரே ஒரு குழுவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், 10 இடங்களில் மட்டுமே போட்டியிடும்இந்தக் கட்சியில், அனைத்து கோஷ்டிகளுக்கும் இடம் தரும் வகையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் வரும் நாளையும் (24ம் தேதி) மறுதினமும் நேர்காணல்நடத்தப்படவுள்ளது.
தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள். எனவே, வேட்பாளர் தேர்வில்கோஷ்டி கானம் வந்து விடக் கூடாது என்பதற்காக அத்தனை பேரும் சேர்ந்தே நேர்காணல் நடத்துவது என்றமுடிவுக்கு வந்துள்ளது காங்கிரஸ்.
ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் இடம் பெற்றிருப்பார்கள். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்த நேர்காணல்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications