தமிழகம்-புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடத்த திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், போலி வாக்காளர்கள் பிரச்சனை குறித்துவிவாதிக்கவும் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரியான பி.பி. தாண்டன், கே.ஜே. ராவ் ஆகியோர் இன்று சென்னைவந்தனர்.

அடுத்த 4 நாட்களும் அவர்கள் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி உள்ளிட்டஅதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனைைநடத்திவிட்டு தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அவர்கள்பேசுவர்.

இதைத் தொடர்ந்து தென் சென்னை, உசிலம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும், அவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்தும் அவர்கள்விவாதிக்க உள்ளனர்.

இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் தாண்டன் கூறுகையில்,

தமிழக்திலும் புதுவையிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கவுள்ளோம். அனைத்துக்கட்சிகளின் கருத்தை அறிந்த பிறகு இதில் முடிவெடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+