கர்நாடக சட்டமன்றம் கலைப்பு
பெங்களூர்:
முதல்வர் கிருஷ்ணா தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையின்படி கர்நாடக சட்டசபை இன்றுகலைக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை ஆளுநர் டி.என். சதுர்வேதி இன்று பிறப்பித்தார். தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமையும்வரை காபந்து அரசின் முதல்வராக நீடிக்குமாறு கிருஷ்ணாவை அவர் கேட்டுக் கொண்டார்.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், முன் கூட்டியேஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே சட்டமன்றத்துக்கும் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ்முடிவு செய்துள்ளது.
இதையடுத்து சட்டமன்றத்தைக் கலைக்க முதல்வர் கிருஷ்ணா பரிந்துரை செய்தார்.
கர்நாடகத்தில் கிருஷ்ணா தலைமையிலான அரசுக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல பெயர் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. தேர்தலில் மீண்டும் காங்கிரசே வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவரைமீண்டும் முதல்வராக பிற காங்கிரஸ் தலைவர்கள் அனுமதிப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications