அதிமுக கைவிரிப்பு: கடன் தொல்லையில் இருந்து தப்ப கார்த்திக் போட்ட திட்டம் பணால்?
சென்னை:
தனது கடன் தொல்லைகளில் இருந்து தப்பவே, அதிமுகவில் சேர நடிகர் கார்த்திக் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதையடுத்து அவரை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா வந்துவிட்டதாக அதிமுகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் நடிகர், நடிகையரை சேர்க்கும் வேலை எஸ்.எஸ். சந்திரன் மற்றும் ராதாரவியிடம் தரப்பட்டுள்ளது.அவர்களும் வலை வீசி வருகின்றனர். இதில் கார்த்திக் தானாகவே முன் வந்து அதிமுக சேருவதாக ராதாரவியிடம்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்தார் ராதாரவி. ஆனால், ஜெயலலிதாவை சந்திக்கஅவருக்கு இதுவரை வாய்ப்பு தரப்படவில்லை. இதற்கான காரணமும் சொல்லப்படுகிறது.
போதை வஸ்துக்கள், இத்யாதிக்கு அடிமையாகிவிட்ட கார்த்திக் பினாமிகளை வைத்து சொந்தமாகப் படமெடுத்தவகையில் ரூ.5 கோடி கடன், இது தவிர தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்காமல் டேக்காகொடுத்த வகையில் ரூ. 2 கோடி கடன் உள்ளது.
இதைக் கேட்டு மிரட்டி வருபவவர்ளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார் கார்த்திக். இந் நிலையில் தேவர்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சசிகலா தரப்பினருடன் சில தொடர்புகளையும் வைத்துள்ளார்.
இந் நிலையில் தான் நடிகர், நடிகையரை தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்சியில் இழுக்கும் ஜெயலலிதாவின் திட்டத்தைஅறிந்து தானாகவே அதிமுகவில் சேர முன் வந்தார் என்கின்றனர்.
ஆனால், அவரை நம்பி எந்தப் பிரச்சாரக் கூட்டத்தையும் நடத்த முடியாது, வருவேன என்பார் கடைசி நேரத்தில்வர மாட்டார், அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கூட கஷ்டம் என ஜெயலலிதாவுக்கு போலீஸ்ரிப்போர்ட் கிடைத்ததையடுத்து கார்திக்குக்கு நோ செல்லப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
ஆனால், சசிகலா தரப்பில் இருந்து நெருக்குதல் தந்து எப்படியாவது அதிமுக கவசத்தை மாட்டிக் கொண்டு கடன்தொல்லையில் இருந்து தப்பும் முயற்சியில் தீவிரமாகவே இருக்கிறார் கார்த்திக்.
விவேக், குஷ்புவுக்கு அழைப்பு:
இதற்கிடையே அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு நடிகர் விவேக், குஷ்பு ஆகியோருக்கு தொடர்ந்துதூது போன வண்ணம் உள்ளது. இதில் சசிகலா தரப்புக்கு நெருக்கமாக உள்ள விவேக் தலையாட்டிவிடுவார் என்றேதெரிகிறது. அவரும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல குஷ்புவையும் எப்படியாவது இழுத்து வந்துவிடுவார்கள் என்றே தெரிகிறது.