For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலியிடத் தடை நீக்கம்: ஆடு, கோழிகளுடன் களை கட்டும் தென் மாவட்ட கோவில்கள்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஆடு, கோழிகளைப் பலியிட தடை நீக்கப்பட்டு விட்டதால் தென் மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்கள், கிராமதேவதைக் கோவில்கள் மீண்டும களை கட்டத் தொடங்கி விட்டன.

கோவில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு திடீரென்றுகடுமையாக அமல்படுத்தத் தொடங்கியது.

இதனால் பக்தர்கள் குறிப்பாக கிராமப்புற கடவுள்களை வணங்கும் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தைச் சேர்ந்தபக்தர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்த முடியாததால் இந்தத்தடையை அரசு நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.

இந் நிலையில் தேர்தல் நெருங்குவதையொட்டி கிராமப்புற மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் கவரும்பொருட்டு, ஆடு, கோழி பலிக்கு தடையை நீக்கி அவரசச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

இதனால் பக்தர்கள், குறிப்பாக தென் மாவட்டத்தினர், பெரும் உற்சாகமடைந்துள்ளனர். ஆடு, கோழிகளுடன்அவர்கள் தங்களது குல தெய்வக் கோவில்களுக்கும், வழக்கமாக சென்று பலி கொடுக்கும் கோவில்களுக்கும்படையெடுத்து வருகிறார்கள்.

மதுரையில் உள்ள பாண்டி கோவிலில் ஆடு, கோழி வெட்டுவது மீண்டும் களை கட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஏராளமான ஆடுகள் வெட்டப்படுவது வழக்கம். தடைக்கு முன் இருந்ததை விடநேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மிக அதிகமாக ஆடுகள் வெட்டப்பட்டதாக கோவில் பூசாரிகள்தெரிவித்தனர்.

ஆடு பலிக்குத் தடையால் பக்தர்கள் கூட்டமின்றி, வாடி, வதங்கிப் போய் கிடந்த இந்தக் கோவிலைச் சுற்றிலும்உள்ள கடைகளும் மீண்டும் புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளன.

இதேபோல தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராம தேவதை கோவில்களிலும், தாயமங்கலம் மாரியம்மன்கோவில், காளியம்மன், மதுரை வீரன் சாமி கோவில்களிலும் ஆடு, கோழி பலியிடுதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X