"தமிழ்த் தாத்தா"வின் இல்லம் அரசுடமையானது: நினைைவில்லம் அமைகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் வசித்து வந்த வீடுஅரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில்,

தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றின் காரணமாக, ஓலைச் சுவடிகள் இருந்தசங்கத் தமிழ் நூல்களையும், பழந்த் தமிழ் காப்பியங்களையும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை அச்சில் ஏற்றி,காலத்தால் அழிந்து போகாமல் காப்பாற்றியவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்.

அவர்களின் நிநனைவைப் போற்றும் வகையில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் பிறந்த நாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்த கடந்த1994ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது நான் ஆணை பிறப்பித்தேன்.

ஆனால், உ.வே.சா. அவர்களுக்கு இதுவரை நினைவிடம் அமைக்கப்படவில்லை என்ற செய்தி சமீபத்தில் எனதுகவனத்திற்கு வந்தது.

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த உ.வே.சா. அவர்களது 150வது பிறந்த நாளையொட்டி, அவர்பிறந்த ஊரான திருவாரூர் உத்தமதானபுரத்தில் அவர் வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கி, அதை பழுது பார்த்து,தமிழ்த் தாத்தாவின் நினைவைப் போற்றும் நினைவில்லமாக மாற்ற உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+