கட்டிங்: வேட்டிகளை உருவி அதிமுகவினர் சண்டை
சென்னை:
சென்னை பொன்னேரி பகுதியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர்களிடையே அடிதடி மூண்டது.இதில் பலரது வேட்டிகள் உருவப்பட்டன. சேர்கள் பறந்தன. பலருக்கும் மண்டை உடைந்தது.
அரசின் டெண்டர்களை ஒரு கோஷ்டியே எடுத்து காண்ட்ராக்ட்கள் மூலம் பணம் பார்ப்பதாகவும், தங்களுக்குஉரிய கமிஷனோ, காண்ட்ராக்ட்களோ கிடைப்பதில்லை என்றும், காண்ட்கார்ட் பணத்தில் தங்களுக்கு கட்டிங்ஏதும் கிடைப்பதில்லை என்றும் கூறி ஒரு கோஷ்டி பிரச்சனை கிளப்பியது.
மேலும் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தங்களது பெயர்கள் போடப்படவில்லை என்று கூறிய அந்தகோஷ்டியினர் கூட்டம் ஆரம்பித்தவுடனேயே சேர்களைத் தூக்கி மேடை மீது வீசினர். இதனால் பேச வந்திருந்தநடிகை சி.ஆர். சரஸ்வதி அங்கிருந்து இறங்கி ஓடினார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உபயதுல்லா என்பவரது கோஷ்டியினர், எதிர்கோஷ்டி மீதுபாய்ந்து வேட்டிகளை உருவி எறிந்தனர். பதிலுக்கு எதிர்கோஷ்டியும் வேட்டி உருவல் கலை நிகழ்ச்சியைநடத்தியது.
இதனால் இரு தரப்பினரும் அரை நிர்வாணத்துக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து பரஸ்பரம் சட்டைகளைக் கிழிக்கஆரம்பித்தனர். தொடர்ந்து சேர்களைக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
இதனால் கூட்டம் நடந்த பொன்னேரி பகுதியே ரணகளமானது. போலீசார் தலையிட்டும் அமைதியை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications