For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கராச்சாரியார், ஜெ. மீது கருணாநிதி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விருதுநகர் மாநாட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, திமுகவின் அரசியலில்இருந்து எளிமை காணாமல் போய்விட்டதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்து முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரையில் முதல்வர் ஜெயலலிதா,காஞ்சி சங்கராச்சாரியார் ஆகியோரை மறைமுகமாக ஒப்பிட்டு பதில் தந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

என்ன செய்வது, அவாள் கனகாபிஷேகம் செய்தால் அது எளிமை

அவாளுக்கு ஆள் உயர மாலை போட்டால், அது எளிமை

அவாளுக்கு மலர்க் கிரீடம் சூட்டினால் அது எளிமை

அவாள் மகாமகத்துக்கு கோடிக்கணக்கில் செலவழித்தால் அது எளிமை

நம்மவாள், நுழைவுக் கட்டணம் போட்டும், பல லட்சம் பேர் காசு கொடுத்து பேச்சு கேட்க வந்தால்

அது எளிமையல்ல, ஏக ஆடம்பரம்... இரட்டை நாக்கு எப்படியும் பேசும்

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக மாநாடு முடிந்த பின்னர் லட்சக்கணக்கான திமுகவினர் கலைந்து செல்லவே 4 மணி நேரம் பிடித்தகாரணத்தால் விருதுநகர் அந்த இரவில் தத்தளித்துள்ளது. மாநாட்டு மைதானத்தை விட்டு வெளியேற முடியாதகருணாநிதி அங்கேயே 4 மணி உட்காரும் நிலை ஏற்பட்டது.

பின்னர் அதிகாலையில் புறப்பட்டு மதுரை வந்த அவர் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு நேற்றிரவு தான்சென்னை கிளம்பினார்.

அதே போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநாடு முடிந்தவுடன் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டும்கூட அவரத் கார் விருதுநகரில் கூட்டத்தைத் தாண்டி வெளியே வரவே 5 மணி நேரம் ஆகியுள்ளது. இதனைபொடா நீதிமன்றத்தில் நிருபர்களிடம் தெரிவித்த வைகோ, இதைப் போன்ற ஒரு கூட்டத்தை நான் பார்த்ததேஇல்லை. விருதுநகரில் ஜனக் கூட்டம் அல்ல, ஜனக் கடல் திரண்டது என்றார்.

பா.ஜ.க. எதிர்ப்பு:

இதற்கிடையே விருதுநகரில் திமுகவும் தோழமைக் கட்சியினரும் பேசிய பேச்சுக்கள் மத மோதலை உருவாக்கும்வகையில் அமைந்திருந்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா இன்று நிருபர்களிடம் கூறுகையில், மதநல்லிணக்கம், தேசியஒருமைப்பாட்டுக்கு விருதுநகர் மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாகும். கூட்டணியில் இருந்தபோது பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று இவர்களுக்குத் தெரியாதாம். இப்போது தெரிந்துவிட்டதாம்.

திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட்டு முக்கியத் தலைவர் ஒருவர்விலகிவிட்டார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X