For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஷிங்டன்: 3 சீக்கியர்களை சுட்டுக் கொன்ற சீக்கியர் அடித்துக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

வாஷிங்டனில் சீக்கியர்கள் மீது அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர்பலியாயினர். இதையடுத்து அவரை சீக்கியர்களே அடித்துக் கொன்றனர்.

இந்தப் பரபரப்பான சம்பவம் சான்ஜோசில் உள்ள ஒரு நேற்று பூங்காவில் நடந்தது. அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 15 சீக்கியர்கள் மீது 43 வயதான சீக்கியர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 50, 60 வயதான 2 சீக்கியர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கிருந்த பிறசீக்கியர்கள் அவரை அடித்தே கொன்றனர்.

இவர் சுட்டதில் பலத்த காயமடைந்த 45 வயதான சீக்கியர் ஒருவர் சான்ஜோஸ் மருத்துவமனையில் இறந்தார்.மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சர்வான் சிங் கில் என்பவர் கூறுகையில், நாங்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில்இங்கே சீட்டாடுவது வழக்கம். பெரும்பாலும் முதிய சீக்கியர்கள் இங்கே கூடுவர்.

இந் நிலையில் நேற்றும் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் துப்பாக்கியுடன் அங்கு வந்துபஞ்சாபியில் அனைவரையும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். அவர் யார் என்றே தெரியவில்லை. இதற்குமுன் அவரை நாங்கள் பார்த்தும் இல்லை. திட்டிக் கொண்டே இருந்தவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால்சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இதையடுத்து அனைவரும் எழுந்து ஓடினோம். நான் ஒரு மரத்தின் பின்னால் மறைந்ததால் உயிர் தப்பினேன்.தனது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்தவுடன் மீண்டும் அதில் குண்டுகளை அந்த நபர் நிரப்ப ஆரம்பித்தார்.

அப்போது தான் பின்னால் இருந்து வந்த ஒருவர் அவரைத் தாக்கி கீழே விழச் செய்தார் என்றார்.

இதன் பின்னர் அங்கிருந்த பிற சீக்கியர்கள் சேர்ந்து அவரை அடித்தே கொன்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X