கருணாநிதி, வைகோ, ராமதாஸ் மீது பா.ஜ.க. கடும் பாய்ச்சல்
சென்னை:
கருணாநிதி, வைகோ, ராமதாஸ் மீது இன்று பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் கடும் தாக்குதல் தொடுத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பா.ஜ.க. தேர்தல் குழுக் கூட்டம் நாளை மீண்டும் நடக்கிறது. இதில் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடுகலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும்.
அதன் பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை நாயுடு அறிவிப்பார். நாளையே அறிவிப்பார் என்று சொல்ல முடியாது.அதை அவர் தான் முடிவு செய்வார்.
பா.ஜ.கவுக்கு எதிராக பா.ம.க. தலைவர் ராமதாஸ் பேச ஆரம்பித்துள்ளார். அவர் தேர்தலுக்குத் தேர்தல் ஒரு நிலைஎடுப்பார். கொள்கை ஏதும் இல்லாதவர். யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டு சேருவார். ரஜினிக்குஎதிராக ராமதாஸ் பேசியபோது அதை முதலில் கண்டித்தது நாங்கள் தான்.
அதே போல கூட்டணி மாறும்போது தகுந்த தாளத்தைப் போடுபவர் கருணாநிதி. அவர் சொல்வதையெல்லாம்தமிழக மக்கள் நம்புவார்கள் என்று நினைத்து உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார். அவருக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போலி மதசார்பின்மையைப் பேசி வருகிறார். 4 வருடம் எங்களோடுஇருந்துவிட்டு இந்தியா ஒளிரவில்லை, இருண்டுவிட்டது என்கிறார்.
40 தொகுதிகளிலும் திமுக, மதிமுக, பா.ம.க. கூட்டணியை தோற்கடிப்போம் என்றார் ராதாகிருஷ்ணன்.
சென்சார் போர்ட்டில் பா.ஜ.கவினர் ஆதிக்கம்:
இதற்கிடையே தமிழகத்தில் சினிமாக்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டில் 5 பா.ஜ.கவினர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய செய்தித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தநியமனங்களைச் செய்துள்ளார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, லலிதா சுபாஷ், ராஜசிம்மன், சுஜாதா ராவ், ஜெய்சங்கர்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications