பதவிக்கு அலையும் காங்கிரஸார்: 10 சீட்டுக்கு 422 பேர் போட்டி !
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட 422 பேர் மனு தாக்கல்செய்துள்ளதால் யாருக்கு சீட் தருவது, யாரை விடுவது என்று புரியாமல் அந்தக் கட்சி குழம்பிப் போயுள்ளது.
இந் நிலையில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களிடம் இன்றும் நேர்காணல் நடந்தது. இன்று மாலையேவேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சி மேலிடத்திற்குப் பட்டியல் அனுப்பப்படவுள்ளது.
கோஷ்டிகள் அதிகம் கொண்ட காங்கிரசில் ஒரே தொகுதிகளை பல்வேறு கோஷ்டிகள் கேட்கின்றன. ராசிபுரம் தனிதொகுதியைக் கேட்டு 140 பேர் கேட்டு மனு கொடுத்துள்ளனர். நீலகிரி தொகுதிக்கு மட்டுமே குறைந்த அளவாக 10பேர் மனு செய்துள்ளனர்.
இவர்களிடம் அனைத்து கோஷ்டிகளின் தலைவர்களை உள்ளடக்கிய 6 குழுக்கள் நேர்காணல் நடத்தி வருகின்றன.நேற்று வரை 356 பேரிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று மிச்சமுள்ளவர்களிடமும் நேர்காணல்முடிக்கப்பட்டுவிடும்.
இதன் இறுதியில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள், தேர்தல் குழுவினர் மற்றும் எம்.எல்.ஏக்களின் கூட்டம்நடைபெறுகிறது. அப்போது, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஆனால், இந்த நேர்காணலே இது வெறும் கண்துடைப்பு தான். இதில் தேர்வாகும் நபர்களுக்கு சீட் உறுதியில்லை.இறுதிப் பட்டியலை முடிவு செய்யப் போவது கட்சியின் டெல்லி தலைமை தான். இதனால் மாநிலத் தலைவர் வாசன்,முன்னாள் தலைவர் இளங்கோவன் கோஷ்டிகள் டெல்லியில் தங்களது செல்வாக்கை வைத்து அதிகபட்சஇடங்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இவர்களைத் தவிர குட்டி கோஷ்டிகளும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் உள்ள நிர்வாகிகளைப் பிடித்து சீட்பிடிக்க முயல்கின்றன.
மாலையில் நேர்காணல் முடிந்தவுடன் பட்டியலுடன் வாசன் டெல்லி செல்வார். அவரைத் தொடர்ந்து எல்லாகோஷ்டிகளின் தலைகளும் டெல்லிக்கு காவடி எடுக்கும். அங்கு முட்டி மோதி தங்களது ஆதரவாளர்களுக்கு சீட்பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications