இன்றிரவு துவங்குகிறது கும்பகோணம் மகாமக விழா
கும்பகோணம்:
உலகப் பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மகாமக குளத்தில் புனிதநீராடுவது.
விழாவையொட்டி மகாமகக் குளம் தூர் வாரப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இப்போது நீர் நிரப்பப்பட்டுவருகிறது. இன்று இரவு 7 மணிக்கு கணபதி வர பூஜையுடன் மகாமக விழா தொடங்குகிறது.
நாளை காலை காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீராடி கொடியேற்றி வைக்கிறார். அதே போல ஆதி கும்பேஸ்வரர்,நாகேஸ்வரர், காசிவிசுவநாதர், அபி கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 12 சைவக் கோவில்களில் நாளை கொடிஏற்றப்படுகிறது.
நாளை மறுதினம் ஆதி சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதி வராகப் பெருமாள் மற்றும் ராமசாமி கோவில் உள்ளிட்ட 5வைணவக் கோவில்களில் கொடியேற்றப்படும்.
அதன் பின்னர் இந்த 8 கோவில்களிலும் 10 நாட்களுக்கு உற்சவம் நிடைபெறும். சைவக் கோவில்களில் மார்ச் 6ம்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் இந்தக் கோவில்களில் ஏக தின உற்சவம்நிடைபெறும்.
அதே நாளில் 12 சிவன் கோவில்களிலிருந்து சுவாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இப்போதே ஆயிரக்கணக்கானபக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications