மீண்டும் ஒரு "என்கவுண்டர்": சேலத்தில் கைதி சுட்டுக் கொலை!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கைதியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கர்ணன் என்பவரை போலீஸார் கைது செய்து ஓமலூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கர்ணனை சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.
போலீஸாரும், கர்ணனும் சென்ற ஜீப் முத்துமாணிக்கம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, கர்ணனுக்கும், போலீஸாருக்கும்இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் அசோகன் என்ற துணை காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு கர்ணன் தப்ப முயன்றதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இந்தகளேபரத்தில் கர்ணனை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கொன்றனர்.
காயமடைந்ததாகக் கூறப்படும் அசோகன் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications