கோவை, நாகர்கோவில், நீலகிரிக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
கோவை, நாகர்கோவில், நீலகிரி தொகுதிகளில் சிட்டிங் எம்.பிக்களே போட்டியிடுவார்கள் என்று பா.ஜ.க.அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை தொகுதியில் கட்சியின் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், நாகர்கோவில் தொகுதியில் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நீலகிரி தொகுதியில் கட்சியின் மாநில துணைத் தலைவரான மாஸ்டர்மாதனும் போட்டியிடுவார்கள்.
வட சென்னை, தர்மபுரி, சிதம்பரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். இந்தப்பட்டியலை வரும் 1ம் தேதி டெல்லியில் கட்சியின் மத்திய தேர்தல் பணிக் குழுவிடம் சமர்ப்பிப்போம்.பாண்டிச்சேரி தொகுதிக்கான வேட்பாளரை அம்மாநில பா.ஜ.க. தேர்வு செய்யும்.
பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவுடன் தொகுதி மாற்றம் குறித்துப் பேசவில்லை. இனிஜெயலலிதா தொகுதியை மாற்றினாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
இந்தியா ஒளிர்கிறது என்ற மத்திய அரசின் விளம்பரத்தைக் குறை கூறும் தகுதி திமுக தலைவர் கருணாநிதிக்குக்கிடையாது. அவர் முதல்வராக இருந்தபோது, தங்களது ஆட்சியின் சாதனைகளை விளக்கி பத்திரிக்கைகளில்விளம்பரம் செய்தார். இப்போது எங்களைக் குறை கூறுகிறார் என்றார்.
வட சென்னை, சிதம்பரம், தர்மபுரி தொகுதிகளில் போட்டியிட யாரும் முன்வராததால், வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் மாநில பா.ஜ.க. திணறி வருகிறது. அதன் காரணமாகவே மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களைஅறிவிக்க முடிந்த பா.ஜ.கவால் இந்த மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை.