கால்நடை பல்கலைக்கழகத்தில் பெண் ஊழியர் மர்மச் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெண் ஊழியர் அலுவலக கழிப்பறையில் உடல் எரிந்துஇறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் மர்மம் நிலவுகிறது.

வியாசர்பாடியைச் சேர்ந்த சேகரின் மனைவி புஷ்பலதா (41). மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைமருத்துவப் பல்கலைக்கழகத்தின் அச்சகத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்தார் புஷ்பலதா.

இந் நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கழிவறையில் இருந்து புஷ்பலதாவின் அலறல் சத்தம் கேட்டுஊழியர்கள் அங்கு ஓடினர். அப்போது உடலெங்கும் தீயில் எரிந்து கொண்டிருந்தார் புஷ்பலதா. அடுத்த சிலநிமிடங்களில் அவர் சரிந்து விழுந்த அவர் இறந்து போனார்.

அவர் மீது யாராவது பெட்ரோல் அல்லது மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பிவிட்டார்களாஅல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை.

இந் நிலையில் புஷ்பலதாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரி ஜெயலட்சுமி கூறியுள்ளார். அவர்கூறுகையில், புஷ்பலதாவின் உடலில் சில இடங்ளில் ரத்தக் காயம் இருந்தது. அவர் ஷாக் அடித்து இறந்திருக்கலாம்என்று அலுவலகத்தில் சிலர் கூறுவதையும் நம்ப முடியவில்லை. டாய்லெட்டில் ஒரு மண்ணெண்னை கேன்எரியாமல் அப்படியே உள்ளது. இதனால் அலுவலகத்தில் தான் ஏதோ நடந்திருக்கிறது. அதை மறைக்கப்பார்க்கிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+