டெல்லிக்கு காவடி எடுத்த காங்கிரசார்: தலைநகரில் குவிந்த கோஷ்டிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநிலத் ஜி.கே.வாசன் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர்டெல்லி விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இதற்கு பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த 430பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் கடந்த 3 நாட்களாக நேர்காணல் நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு கோஷ்டியையும் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் 430 பேரில் சுமார் 75 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்த 75 பேரின் பட்டியலுடன் வாசனும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் டெல்லி சென்றனர். இவர்களுக்குமுன்பாகவே முன்னாள் தலைவர் இளங்கோவன் டெல்லி போய்விட்டார். அதே தங்கபாலு, ஜே.எம். ஆருண்,என்.எஸ்.வி சித்தன், தனுஷ்கோடி ஆதித்தன் போல மற்றத் தலைகளும் டெல்லிக்குப் பறந்துவிட்டன.

அங்கே தங்களுக்குள்ள செல்வாக்கை வைத்து தங்களது ஆட்களுக்கு இடம் பிடிக்க இந்தத் தலைவர்கள் முயல்வர்.

இதற்கிடையே இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஆய்வுக் கமிட்டியின் கூட்டம் அதன் தலைவர் பூட்டாசிங்கின்தலைமையில் டெல்லியில் கூடுகிறது. அப்போது 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்துவிவாதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+