வருமானத்தை மீறிய சொத்து: 3 திமுக மாஜி அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம்,என்.கே.கே. பெரியசாமி, புலவர் செங்கூட்டுவன் ஆகியோர் மீது இன்று நீதிமன்றத்தில் தமிழக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவர்களது வீடுகள் மீது பலமுறை போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் தலைமைஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கைத்தறித்துறை அமைச்சராக இருந்த பெரிசாமி மூது ஈரோடு நீதிமன்றத்திலும் கால்நடைத்துறை அமைச்சராகஇருந்த செங்கூட்டுவன் மீது திருச்சி நீதிமன்றத்திலும் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications