அதிமுகவின் காலடியில் பா.ஜ.க: கருணாநிதி கிண்டல்
சென்னை:
பா.ஜ.க. கூட்டணியை சரணாகதி கூட்டணி என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முரசொலியில் கூறியிருப்பதாவது:
போயஸ் தோட்டத்தில் போய் கெஞ்சிக் கூத்தாடி, போடு தோப்புக் கரணம் என்று சொன்னதும் தோப்புக்கரணம்போட்டு 7 தொகுதி தொகுதிகள் வாங்கி வந்தனர் பா.ஜ.கவினர்.
மத்திய அமைச்சர் திருநாவுக்கரசருக்குக் கூட ஒரு தொகுதி வாங்க முடியாமல் அதிமுகவின் காலடியில் விழுந்துசரணாகதி கூட்டணி அமைத்துவிட்டு, திமுக கூட்டணியை நிர்ப்பந்தக் கூட்டணி என்று பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு வாய் கூசாமல் சொல்கிறார்.
ஜனனி வழக்கு மட்டுமல்லாது மற்ற வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளது. அந்தப் பாவங்களை எல்லாம் போக்க ஒரு மகாமகத்தில் நீராடினால் போதாது. ஆயிரம்மகாமகக் குளங்களை வெட்டி அவற்றில் புனித நீராட வேண்டும்.
20 லட்சம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கண்டறிந்து நீக்கியுள்ளது. இன்னும் நீக்கப்படாதவாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ? கழக உடன்பிறப்புகள் விழிப்புடன் இருக்க வேண்டும்என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications