16 தொகுதிகளில் போட்டியிடுகிறது புதிய நீதிக் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உதித்த ஜாதிக் கட்சிகளில் ஒன்றுதான் புதிய நீதிக் கட்சி.முதலியார்கள், பிள்ளைமார்களை மனதில் வைத்து தோன்றிய அக் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் தரப்பட்டது.

ஆனால், ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத புதிய நீதிக் கட்சி அதற்குப் பின் காணாமல் போனது. இந் நிலையில்நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் இந்தக் கட்சி செயல்பட ஆரம்பித்துள்ளது.

ஆனால் கூட்டணியில் சேர்க்கத்தான் யாரும் இல்லை. இதனால் தனித்துப் போட்டியிட்டு தங்களது பலத்தைநிரூபிப்போம் என்று மார் தட்டி வருகிறார் இதன் தலைவரும் செல்வந்தருமான ஏ.சி.சண்முகம்.

சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தலில் போட்டியிட பலர் மனு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், வேலூரில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் நாங்கள்போட்டியிடப் போகும் 16 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டோம். இப்போது கட்சியினரின் கருத்துக்களைஅறிந்து வருகிறோம்.

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளமூன்றாவது கூட்டணியான மக்கள் கூட்டணியில் நாங்களும் இணைகிறோம். எங்களுக்குள் தொகுதிப் பங்கீடுகுறித்து பிரச்சினையே வராது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+