உலக பணக்காரர் பட்டியலில் விப்ரோ பிரேம்ஜி உள்பட 9 இந்தியர்கள்
நியூயார்க்:
போர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர் பட்டியிலில் விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்ட 9இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியர்களான அஸிம் பிரேம்ஜி 58வது இடத்தையும் (6.7 பில்லியன் டாலர்கள்), இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்டீல்ஆலைகள் அதிபர் லட்சுமி மிட்டல் 62வது இடத்தையும் (6.2 பில்லியன் டாலர்கள்), ரிலையன்ஸ் நிறுவனத்தின்அம்பானி சகோதரர்கள் 65வது இடத்தையும் (6 பில்லியன் டாலர்கள்), பிர்லா நிறுவன அதிபர் குமாரமங்கலம்பிர்லா 147வது இடத்தையும் (3.2 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.
சுனில் மிட்டல் 186வது இடத்தையும் (2.7 பில்லியன் டாலர்கள்), டாடா நிறுவனத்தின் பெரும் பங்குகளை தன் வசம்வைத்திருக்கும் பலோன்ஜி மிஸ்ட்ரி 231வது இடத்தையும் (2.3 பில்லியன் டாலர்கள்), கோத்ரெஜ் குடும்பத்தினர்277வது இடத்தையும் (2 பில்லியன் டாலர்கள்),
எச்.சி.எல். சாப்ட்வேர் நிறுவன அதிபரும் தமிழருமான ஷிவ் நாடார் 310வது இடத்தையும் (1.8 பில்லியன்டாலர்கள்), அனில் அகர்வால் 552வது இடத்தையும் (1 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு 64 பேர் உலக பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.
இவர்களில் ஜே.கே.ரோலிங்கும் ஒருவராவார். ஹாரிபாட்டர் நாவல்களினால் உலகமெல்லாம் சிறுவர்களின்இதயங்களில் இடம் பிடித்த இவர், அந்த நாவல்கள் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தின் மூலம் உலகபணக்காரர் வரிசையிலும் இடம் பிடித்து விட்டார். இவருக்கு 552வது இடம்.