For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசுக்கு எதிராக விகடன், கல்கி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கை எதிர்த்து விகடன் மற்றும் கல்கி பத்திரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இதையடுத்து மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியள்ளது.

தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி, இந்து, நக்கீரன், முரசொலிபத்திரிக்கைகளைத் தொடர்ந்து, விகடன் மற்றும் கல்கி மீதும் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை எதிர்த்து இரு பத்திரிக்கைகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டள்ளது. அதில், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் குறித்து எழுத பேச்சுரிமை மற்றும்எழுத்துரிமை வழங்கும் வகையில் இந்திய அரசியல் சட்டப் பிரிவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 499 முதல் 502 வரையிலான சட்டப் பிரிவுகள் குறித்தும் இந்தமனுக்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால் இவற்றை இந்து பத்திரிக்கை தாக்கல் செய்திருந்த மனுவோடுசேர்த்து விசாரிக்கப் போவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X