தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது: சுபாஷன் ரெட்டி பாராட்டு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.

திருநெல்வேலியில், முன்னாள் அதிமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியனின் எம்.பி தொகுதி நிதியுதவியின்மூலம் கட்டப்பட்டுள்ள பி.எச்.பாண்டியன் சட்ட நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் சுபாஷன் ரெட்டி.

அவர் பேசுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. நல்ல நிர்வாகம் உள்ளது. ஜனநாயகத்தின் மூன்று தூண்களானசட்டசபை, நீதி மற்றும் நிர்வாகம் ஆகியவை இங்கு சிறப்பாக செயல்படுகின்றன.

ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் கூட ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலம் அவை மறைந்து விட்டன.

தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் இதுபோன்ற சட்ட நூலகங்களை அமைக்க வேண்டும். ஒவ்வொரு எம்.பியும்,எம்.எல்.ஏவும் இதற்காக நிதியுதவி செய்ய வேண்டும் என்றார் சுபாஷன் ரெட்டி.

தமிழகத்தில் நீதித்துறையாகட்டும், நிர்வாகத்துறையாகட்டும், தனி மனித விஷயமாகட்டும் ஏதோ ஒரு நாடகம் நடக்கிறது என்றுஉச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் கருத்து தெரிவித்தது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+