காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி
டெல்லி:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இழுபறிஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றைய கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாமல், இன்றும் தொடர்ந்து ஆலோசனை நடந்துவருகிறது.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கானவேட்பாளர்களைத் தேர்வு செய்ய தமிழக காங்கிரஸ் கட்சி நேர்காணல் நடத்தி சுமார் 70 பேரைத் தேர்வு செய்துள்ளது.
இந்த உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ்டித் தலைவர்களும் டெல்லிவந்துள்ளனர்.
வாசனுடன் வேட்பாளர் கமிட்டித் தலைவர் பூட்டா சிங், அகில இந்திய பொதுச் செயலாளர் கமல்நாத், செயலாளர் தல்ஜீத்சிங்ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் பல தொகுதிகளில் கோஷ்டிப் பூசல்ஏகமாக இருப்பதால் யாரைப் போடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் நேற்றைய கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இன்று மீண்டும் கூடி ஆலோசித்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, சிவகங்கையில் சுதர்சன நாச்சியப்பன், மயிலாடுதுறையில் மணி சங்கர அய்யர்,கோபிச்செட்டிப்பாளையத்தில் இளங்கோவன், பழனியில் கருவேடன், திண்டுக்கல்லில் என்.எஸ்.வி.சித்தன், திருநெல்வேலியில்தனுஷ்கோடி ஆதித்தன், நீலகியில் ஆர்.பிரபு, ராசிபுரத்தில் ராணி, சேலத்தில் தங்கபாலு ஆகியோர் போட்டியிடலாம் என்றுகூறப்படுகிறது.