உயர் நீதிமன்ற கிளைக்கு ரிட் அதிகாரம் வேண்டும்: மதுரை வழக்கறிஞர்கள்
மதுரை:
மதுரையில் அமைக்கப்படவுள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ரிட்மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் இல்லாவிட்டால் உயர் நீதிமன்றக் கிளை தலையில்லாத முண்டமாகவேஇருக்கும்.
மேலும், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களையும் மதுரை கிளையின் அதிகார வரம்புக்குக் கீழ் கொண்டுவர வேண்டும்.
அதேபோல, பல்வேறு நிர்வாகத் தீர்ப்பாயங்கள் தற்போது சென்னையில்தான் உள்ளன. அவற்றையும் மதுரையில்தொடங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications