சென்னையில் திருட்டு விசிடி தொழிற்சாலை: ரூ. 22 லட்சம் சிடிக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் திருட்டு விசிடிக்களை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்று வந்த 3 பேர் கும்பலை போலீஸார் வளைத்துள்ளனர்.
சென்னை அயனாவரம், நம்மாழ்வார்ப்பேட்டை பகுதியில் திருட்டு விசிடிக்கள் தயாரிக்கப்படுவதாக குற்றப் பிரிவு போலீசாருக்குஉளவுப் பிரிவினர் தகவல் தந்தனர்.
இதன் அடிப்படையில் சண்முகராஜன் என்பவரின் ஹோட்டல் மேல் தளத்தில் உள்ள வீட்டில் போலீஸார் அதிரடி சோதனைநடேத்தினர். அப்போது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வீடே திருட்டு விசிடி தயாரிக்கும் தொழிற்சாலை போல காணப்பட்டது. அந்த வீட்டின் குளியலறை, படுக்கை அறை எனஎங்கு பார்த்தாலும் விசிடிக்கள் நிரம்பி வழிந்தன. இதில் பெரும்பாலானவை புதிய படங்களின் சிடிக்கள் மற்றும் பலான படங்கள்.
ஏராளமான திருட்டு விசிடிக்கள், போலி கேசட்டுகள், கேசட்டுகளின் மேல் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் அங்கு இருந்தன. ரூ. 22லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், சிடி ரைட்டர்கள், விசிடிக்கள், கேசட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
ஹோட்டல் உரிமையாளர் சண்முகராஜன், குணசேகர், ஜெயபால் ஆகியோரைம் போலீஸார் கைது செய்தனர்.
புதிதாக வெளியாகும் படங்களை ஆயிரக்கணக்கில் காப்பி போட்டு இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இவர்கள்வினியோகம் செய்து வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications