திருப்பூரில் தேர்தல் பேனர்கள் தயாரிப்பு தீவிரம்
திருப்பூர்:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கோவை மாவட்டம் திருப்பூரில் கட்சிகளின் பேனர்கள், கொடிகள் தயாரிப்புப்பணி தீவிரமடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத வாக்கில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அரசியல் கூட்டணிகள்இறுதியாகி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து திருப்பூர் நகரில் கட்சிகளின் பிரசார பேனர்கள், கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணிசுறுசுறுப்படைந்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கியபேனர்கள், கொடிகள் ஆகியவை தயாரிப்புப் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கருணாநிதி, ஸ்டாலின், வாஜ்பாய், அத்வானி, ஜெயலலிதா, அன்புமணி, வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்டதலைவர்களின் படங்களுடன், கட்சி வேட்பாளர்களின் படங்களையும் சேர்த்து பேனர்கள் தயாரிக்கப்படுகின்றன.
கட்சித் தலைவர்களின் படங்களுடன் கூடிய பேனர்கள் ரெடிமேடாக ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது வேட்பாளர்களின் படங்களையும் இணைத்து பேனர்கள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.
ரூ. 30 முதல் ரூ. 400 வரையிலான விலையில் பேனர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.பொதுவான பேனர்கள் தவிர குறிப்பிட்ட வாசகங்களுடன் கூடிய பேனர்களும் ஆர்டர் கொடுத்த 24 மணிநேரத்தில் தயாரித்து தரப்படுவதாக திருப்பூர் பேனர்கள், கட்சிக் கொடிகள் தயாரிப்போர் கூறுகின்றனர்.