கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நோயாளி அடித்து கொலை?
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் மருத்துவமனையில் மன நோயாளியை மருத்துவமனைஊழியர்கள் அடித்துக் கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துஉறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் மனநிலை சரியில்லாத நிலையில் கடந்த மாதம் கீழ்ப்பாக்கம்மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், ரவியின் மனைவி ஹெலனுக்கு ஒரு தந்தி வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து வந்தஅந்த தந்தியில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துமவனையில் ரவி அனுமதிக்கப்பட்டிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு சென்று ஹெலன் உள்ளிட்ட உறவினர்கள் பார்த்தபோது, தலையில் காயத்துடன் ரவிஅனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது அவர் இறந்து விட்டதாகவும் பொதுமருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரவியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்று விட்டதாகக் கூறி ரவியின்உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications