For Daily Alerts
Just In
திருச்சி: சிறை வாசலிலேயே தப்பிய பலே கைதிகள்
திருச்சி:
திருச்சி மத்திய சிறை வாசலிலிருந்து 2 கைதிகள் துணிகரமாக தப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் பொன்ராஜ் மற்றும் சுப்புராஜ். இருவரும் திருட்டு வழக்கில்கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு ஒன்றிற்காக இருவரையும் போலீஸார் முசிறி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும்அவர்களை திருச்சி சிறைக்கு அழைத்து வந்தனர். பேருந்தில் கொண்டு வரப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறைவாசலில்இறங்கியபோது,அங்கிருந்து திடீரென்று தப்பினர்.
அவர்களை போலீஸார் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. சிறை வாசலிலேயே 2 கைதிகள் துணிகரமாகதப்பியது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, February 29, 2004, 5:30 [IST]