ரஜினியை பார்க்க ராமநாதபுரத்திலிருந்து ஓடி வந்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்து பரிதவித்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகள் நஹாராஜ் பாத்திமா.18 வயதாகும் இவர் தீவிர ரஜினி ரசிகை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா, தனது குடும்பத்துக்கவலைகளை ரஜினியிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று நினைத்து சென்னை செல்ல முடிவு செய்தார்.

வீட்டில் கேட்டால் விட மாட்டார்கள் என்பதால், யாருக்கும் தெரியாமல், பஸ் மூலம் சென்னை வந்துள்ளார்.சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பேருந்து வந்து சேர்ந்தது. பஸ் நிலையத்தில்இறங்கிய பாத்திமாவுக்கு எப்படி ரஜினி வீட்டுக்குச் செல்வது என்று தெரியவில்லை.

அப்போது ஆட்டோ டிரைவர் பிரபாகர், பாத்திமாவை அணுகி யார் நீ, எங்கிருந்து வந்துள்ளாய் என்றுகேட்டுள்ளார். அவரிடம், ரஜினி வீட்டுக்குப் போக வேண்டும் என்று பாத்திமா கூறவே, பிரபாகரன் பாத்திமாவைரஜினி வீட்டுக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். ஆனால் ரஜினியைப் பார்க்க பாத்திமாவுக்கு அனுமதிமறுக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியுற்ற பாத்திமா என்ன செய்வது என்று புரியாமல் அழ ஆரம்பித்தார். அவரைப் பார்த்துப்பரிதாபப்பட்ட பிரபாகர், பாத்திமாவிடம் ஆறுதல் கூறி அவரை மதுரவாயல் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றுநடந்ததைக் கூறினார்.

மதுரவாயல் காவல் நிலையத்தினர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து பெண்போலீஸாரிடம் பாத்திமாவை ஒப்படைத்தனர். பின்னர் தேவிப்பட்டணத்தில் உள்ள சுல்தான் தம்பதியினருக்குஇத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+