ப.சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க சோனியா ஆர்வம்
டெல்லி:
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரத்திற்கு, காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் சீட்கொடுக்க கட்சித்தலைவர் சோனியா காந்தி மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில்போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று இரவு இறுதிசெய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியே வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை, ப.சிதம்பரத்தை முன்னிருத்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட சோனியா காந்திவிரும்புகிறார். மேலும் அவருக்கு சிவகங்கை தொகுதியைக் கொடுக்கவும் அவர் தீவிரமாக இருந்தார்.
ஆனால் சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,தற்போதைய சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு ஆதரவாக பல தரப்பினரும் சோனியாவுக்குகடிதம் அனுப்பியதால், அதை மீறி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க சோனியா விரும்பவில்லை.
இருப்பினும், தமிழகத்தில் உள்ள மத்திய வர்க்க மக்களிடையே சிதம்பரத்திற்கு இருக்கும் நல்ல பெயரை சரியானமுறையில் பயன்படுத்திக் கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். எனவே சிதம்பரத்திற்கு காங்கிரஸ் சார்பில் டிக்கெட்கொடுப்பது குறித்து அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மார்ச் 5ம் தேதி இது குறித்து முக்கிய முடிவைஅவர் அறிவிக்கவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் கூறியுள்ளார்.