For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளங்கோவன் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை தமிழகஅரசு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் டி.வி.கணேஷ்தாக்கல் செய்த மனுவில், கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைக் கூட்டம் நடந்தபோது, அரசுத்தரப்புக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட விவாத மோதல் குறித்து இளங்கோவன் அறிக்கைவிடுத்தார்.

அந்த அறிக்கையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் குடியரசுத் தலைவர்ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இளங்கோவன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. எனவேஅவதூறான தகவல்களை தனது அறிக்கையில் தெரிவித்திருந்த இளங்கோவன் மீது நடவடிககை எடுக்க வேண்டும்என்று கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இளங்கோவன் வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறிஉத்தரவிட்டார்.

இளங்கோவன் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கு உள்ளிட்ட சில அவதூறு வழக்குகள்நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X