லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி கிடைக்குமா?
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி தருவது தொடர்பாக தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு திடீர் தடை விதித்தது. இதனால் லாட்டரியால் சீரழிந்து வந்தகுடும்பங்கள் தப்பின. ஆனால், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.
இதைத் தொடர்ந்து லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி தருமாறு அவ்வப்போது முதல்வர்ஜெயலலிதாவுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். பத்திரிக்கைகளிலும் அதிமுகவினர் அளவுக்குஅம்மா, அம்மா என்று ஜெயலலிதாவை புகழ்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. அப்போது லாட்டரிசீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதேபோல, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறாமல் தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்ட திட்டங்களை மேற்கொள்வது குறித்தும்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.