பா.ஜ.கவில் இணைந்தார் வாழப்பாடியின் மகன்: தர்மபுரியில் போட்டியிடுகிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் பா.ஜ.கவில் இணைந்தார். அவரைதர்மபுரியில் பா.ஜ.க. நிறுத்தும் என்று தெரிகிறது.

வன்னிய சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. தமிழகத்தில் காங்கிரஸ்கட்சிக்கு மீண்டும் உயிரூட்டியவர். ராஜிவ் மரணத்தையடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிதேடித் தந்தார்.

ஆனால், பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது நல்லுறவு கசந்தது. பிரதமராக இருந்த நரசிம்மராவுடனும்மோதி, தமிழக ராஜிவ் காங்கிரஸை உருவாக்கினார். திமுகவுடன் கூட்டணி, அதிமுகவுடன் கூட்டணி என மாறி,மாறித் தாவிய அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.

இந் நிலையில் சேலம், தர்மபுரி பகுதிகளில் வாழப்பாடியின் பெயருக்கு இன்னும் கூட செல்வாக்கு இருப்பதால்,அவரது மகன் சுகந்தனை காங்கிரசுக்குள் இழுக்க ஜி.கே. வாசன் தீவிரமாக முயன்று வந்தாலும் சுகந்தன் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார்.

இதற்கிடையே பா.ஜ.க. தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக சுகந்தன் அந்தக் கட்சியில்இணைந்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் சுகந்தன், காங்கிரஸ்முன்னாள் எம்.பி. கலியபெருமாள் ஆகியோர் அக் கட்சியில் இணைந்தனர்.

இவர்களுடன் வாழப்பாடியின் சிஷ்யர்களாக இருந்த சென்னை பூங்காநகர் சேகர் உள்ளிட்ட 18 பிரமுகர்களும்பா.ஜ.கவில் இணைந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெங்கைய்யா நாயுடு, விரைவில் வேலூரில் பா.ஜ.க. மாநாடுநடைபெறவுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.கவில்இணையவுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+