கருணாநிதி புதுசு புதுசா பேசுறார்: பா.ஜ.க.
சென்னை:
தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
கருணாநிதி தினம்தோறும் புதுசு புதுசாய் பேசி வருகிறார்கள். பா.ஜ.கவுடன் மத்தியில் மட்டுமே உறவு. மாநிலத்தில்உறவில்லை என்றார். இப்போது எநத்க் காலத்திலும் உறவே இருந்ததில்லை என்கிறார்.
திராவிடக் கொள்கைகளுக்காக கூட்டணியை விட்டு வெளியேறியதாக சொல்கிறார். நாலரை ஆண்டுகள்கூட்டணியில் இருந்தபோது திராவிடாக் கொள்கை வளர்ந்ததா?. நாளை காங்கிரசைப் பார்த்துக் கூட கருணாநிதிஇப்படிப் பேசக்கூடும். எனவே காங்கிரஸ் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
திமுக எந்தக் காலத்திலும் கொள்கைக்காக கூட்டணி அமைத்ததே கிடையாது. மாறன் உயிரோடு இருந்திருந்தால்கூட்டணியை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். இப்போது தயாநிதி மாறனுக்கு சீட் கொடுத்துள்ளார்கள். அவர்இப்போது தான் திமுகவிலேயே சேர்ந்தார். இதை திமுக தொண்டர்கள் உணர வேண்டும்.
வரும் தேர்தலில் ரஜினியின் ஆதரவையும் கேட்க பா.ஜ.க. தயங்காது. தேர்தலுக்குப் பின் காங்கிரசுக்கும் கூட்டணிக்கட்சிகளும் காணாமல் போவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications