For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானி மேற்கொள்வது ரத யாத்திரை அல்ல.. பஸ் பயணம் தான்: பா.ஜ.க.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

துணைப் பிரதமர் அத்வானி மேற்கொள்ள இருப்பது ரத யாத்திரை அல்ல, நவீன வசதிகள் கொண்ட பஸ் பயணம்தான் என பா.ஜ.க. அகில இந்தியச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், துணைப் பிரதமர் அத்வானி 10ம் தேதிகன்னியாகுமரியில் பிரச்சார யாத்திரையை தொடங்குகிறார். அன்று நாகர்கோவில் செல்லும் அவர் பா.ஜ.க.வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்காக பிரசாரம் செய்கிறார்.

அங்கு பொதுக் கூட்டத்திலும் பேசும் அத்வானி, பின்னர் கேரளா செல்கிறார்.

மீண்டும் 11ம் தேதி இரவு கேரளாவில் இருந்து அத்வானி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் பொதுக்கூட்டத்தில் பேசும் அவர் மறுநாளான 12ம் தேதி கோவை, நீலகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் பயணம் செய்துபா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வார்.

பின்னர் ஓசூர் வழியாக அவர் பெங்களூர் செல்வார். அதிமுகவுடன் கூட்டுப் பிரசாரம் செய்வது குறித்தும் இதுவரைஎந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த யாத்தரை மூலம் கலவரம் ஏற்படும், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்என்று எதிர்க் கட்சிகள் மிரட்டுகின்றன. இதன்மூலம் சிறுபான்மையினரை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சிக்கின்றன.

தர்மபுரியில் அத்வானி பிரச்சாரம் செய்யச் செல்வதற்குள் பா.ஜ.க. வேட்பாளரை அறிவிக்கும்படி தலைமையிடம்கேட்டுள்ளோம் என்றார்.

வாஜ்பாய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதற்குஇல.கணேசனும் கண்டனம் தெரிவித்துதார். உலகமே வாஜ்பாயின் செல்வாக்கைப் புகழ்ந்து கொண்டுள்ளநிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு சிலரின் நற்சான்றிதழ் அவருக்குத் தேவையில்லை என்றார் இல.கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X