9ம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிமுகம்: 15 முதல் கருணாநிதி பிரசாரம்
சென்னை:
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் மார்ச் 9ம் தேதி திமுக பொதுக் கூட்டம் நடக்கிறது. அப்போது அக் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 15 பேரும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
இதையடுத்து கருணாநிதியின் முதல் கட்டப் பிரசாரம் 15ம் தேதி தொடங்குகிறது. வழக்கம்போல் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கவுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்திலும் பேசும் கருணாநிதி, பின்னர் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை செல்கிறார். அன்று இரவு திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
16ம் தேதி செங்கம், பர்கூர், கிருஷ்ணகி செல்லும் கருணாநதி, கிருஷ்ணகியில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
17ம் தேதி தளி மற்றும் ஓசூரில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளார்.
நேரத்தின் அருமை கருதி கருணாநிதிக்கு மாலை அணிவிப்பது, சால்வை அணிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு காலத்தை வீணடிக்க வேண்டாம் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கான வேட்பாளர்களுக்கு கருணாநிதி பிரச்சாரம் செய்யும்போது அக் கட்சிகளின் தலைவர்களும் உடனிருப்பார்கள்.