"இஸ்லாமியர்களிடம் பீதியை ஏற்படுத்தியது பா.ஜ.க.தான்"
மயிலாடுதுறை:
இஸ்லாமிய சமுதாயத்தினரின் மனங்களில் பீதி உணர்வையும், பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தியதுபா.ஜ.கதான் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா பல பிரதமர்களைக் கண்டுள்ளது. ஆனால்பிரதமர் வாஜ்பாய் இவர்களில் வித்தியாசமானவராகத் திகழ்கிறார். எப்படி என்றால், பய உணர்வை விட்டுவிடுங்கள், பாதுகாப்பு இல்லை என்று நினைக்காதீர்கள் என்று முஸ்லீம்களிடம் கூறுகிறார்.
இதுவரை எந்தப் பிரதமரும் இப்படிக் கூறியதில்லை. இப்போது வாஜ்பாய் இப்படிக் கூறுவதற்கு,பாதுகாப்பின்மையும், பீதியும் நிலவுவதே. இந் நிலைக்குக் காரணம் பா.ஜ.க.தான்.
முந்தைய பிரதமர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால்தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் எப்போது, என்ன நேருமோ என்ற அச்ச உணர்வு எங்களை வாட்டி வருகிறதுஎன்றார் காதர் மொய்தீன்.












Click it and Unblock the Notifications