சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டி
சென்னை:
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தனித் தொகுதியில் மக்கள் கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகிறேன். இத்தொகுதியில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சிதரம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் சட்டசபைத் தொகுதியில்திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த மக்களவைத்தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு இடம் அளிக்கப்படாததால் கூட்டணியை விட்டுவெளியேறினார் திருமாவளவன். அதோடு தனது உதயசூரியன் சின்னத்தால் கிடைத்த தனது எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மக்களவைத் தேர்தலைச்சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications