காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயார்
டெல்லி:
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிக்கானவேட்பாளர்களைத் தேர்வு செய்ய, 3 தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் தமிழகத்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டது. கோபிச் செட்டிப்பாளையம்தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன், மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் அய்யர்,நீலகிரியில் பிரபு, திண்டுக்கல்லில் என்.எஸ்.வி. சித்தன், பெரியகுளத்தில் அருண் ஆகியோர் நிறுத்தப்படுவதுஉறுதியாகிவிட்டது.
சிவகங்கை தொகுதியை சிதம்பரத்துக்கு அளிக்க வாய்ப்பிருப்பதாகவும், இல்லாத பட்சத்தில் சுதர்சனநாச்சியப்பனுக்கு அளிக்கப்படும் என்றும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழனி, ராசிபுரம்,சேலம், நெல்லை தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
தலைமையில் அழைப்பை ஏற்று வாசன் நேற்றிரவு மீண்டும் டெல்லி சென்றார். இன்றிரவு தமிழக காங்கரஸின்மேலிடப் பொறுப்பாளர் கமல்நாத், வாசனுடன் ஆலோசனை செய்து மற்ற 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைஇறுதி செய்கிறார்.
பின்னர் சோனியாவின் ஒப்புதல் பெறப்பட்டு நாளை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.