திமுக என்றால் எட்டிக் காயா? பத்திரிக்கைகளுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
வாரிசுகள், வழித் தோன்றல்களை திமுக மட்டுமே ஊக்குவிப்பதாகக் கூறி பத்திரிக்கைகள் கேலிச் சித்திரங்கள்வரைவதாகவும், வசை மொழி பாடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: முன்பு சுப்பராயன் மத்திய அமைச்சராக இருந்தபோதும், அதன்பின்னர் அவரது மகன் மோகன் குமாரமங்கலம் அமைச்சரானபோதும், அவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம்அமைச்சரானபோதும் அதை பெருமையாகக் கூறினார்கள், புகழ் மொழி பேசினார்கள்.
இப்போது சுப்பராயனின் பேத்தி லலிதா குமாரமங்கலம் பா.ஜ.கவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதையும் பெருமையாக கூறிக் கொள்கிறார்கள்.
அதேபோல வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் பா.ஜ.கவில் சேர்ந்ததையும், கர்நாடகத்தில்பங்காரப்பாவும், அவரது மகன் குமார் பங்காரப்பாவும் பா.ஜ.க.வில் சேரப் போவதையும் பெருமையாகக் கூறிவருகிறார்கள்.
ஆனால் திமுகவில் மட்டும் வழித் தோன்றல்கள் உருவானால் அதை விமர்சித்தும், வசை மொழி பாடியும் கிண்டல்செய்கிறார்கள், கேலிச் சித்திரங்கள் வரைந்து வசை மொழி வாந்தி எடுக்கிறார்கள். பா.ஜ.க. என்றால் இவர்களுக்குஇனிப்பாகவும், திமுக என்றால் எட்டிக் காயாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.