கருணாநிதி ஒரு சர்வாதிகாரி: ஆலடி அருணா கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதி ஒரு சர்வாதிகாரி. திகவில் தனது வாரிசுகளை மட்டுமே ஆதரிக்கும் மனம் படைத்தவர் என்றுபா.ஜ.கவில் சேரப் போகும் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த அருணா, பல காலமாக கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.இந் நிலையில், தனது நாடார் சமூகத்தினர் நிறைந்த திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பம் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. எண்கெளன்டரில் இறந்த வெங்கடேச பண்ணையாரின் மனைவிராதிகா செல்விக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ஆலடி அருணா டெல்லி பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்துப் பேடினார். தமிழகத்தில்தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அருணாவை கட்சியிலிருந்து திமுக நீக்கியது.

இந் நிலையில் சென்னை திரும்பிய அருணா நிருபர்களிடம் பேசுகையில்,

இது எதிர்பார்த்த ஒன்றுதான். கண்டிப்பாக நீக்கத்தான் செய்வார்கள். ஆனால் எப்படி நீக்கியுள்ளார்கள்? என்னிடம்விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவில்லை, எனது விளக்கத்தை கேட்கவே அவர்கள் விரும்பவில்லை.

ஜனநாயக முறைப்படி, கட்சியின் விதிப்படி எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால்அவர்களுக்குத்தான் ஜனநாயகத்தின் மீதோ, ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதோ நம்பிக்கையே இல்லையே,பிறகு எப்படி ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பார்கள்?

கருணாநிதி ஒரு சர்வாதிகாரி. தனது குடும்பத்தினரை மட்டுமே கட்சியில் வளர்க்க நினைப்பார். வேறு யாரையும்வளர அனுமதிக்க மாட்டார், விட மாட்டார். இதை திமுக தொண்டர்களுக்கு சரியான முறையில் புரிய வைக்கவேண்டும்.

1950ம் ஆண்டிலிருந்து திராவிட இயக்கத்தில் இருந்து வருகிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின்கொள்கைகளை கடைப்பிடிப்பவன் நான்.

வாஜ்பாய் ஒரு இந்தியர். அவரையே பிரதமராக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிவேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்தேன். வாஜ்பாயை ஆதரிக்கும் எந்தக் கட்சியின் வேட்பாளருக்காகவும்பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி அல்லதுமதிமுகவாக இருந்தாலும் சரி.

திருச்செந்தூர் தொகுதி எனக்குக் கிடைக்காததால்தான் திமுகவுக்கு எதிராக மாறினேன் என்று கூறுவதில்உண்மையில்லை.

உண்மையில் திருச்செந்தூர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த யாருக்கும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. கருணாநிதிகூறுவது போல, வெங்கடேச பண்ணையாரோ அல்லது அவரது மனைவி ராதிகாவோ திமுகவில் உறுப்பினர்களாகஇருந்தது இல்லை என்றார் ஆலடி அருணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+