அமைச்சர் இன்பத் தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவினர் மீதான வழக்கில் சாட்சி சொல்ல வராத, விளையாட்டுத் துறை அமைச்சர் இன்பத் தமிழனை மார்ச் 10ம் தேதிக்குள்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின்போது கள்ள ஓட்டுப் போடமுயன்றதாக கூறி திமுகவினர் மீது இன்பத்தமிழன் போலீஸாரிடம் புகார் தந்தார்.

இதையடுத்து திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில் புகார் கொடுத்தவர் என்ற அடிப்படையில், அமைச்சர் இன்பத் தமிழன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகிசாட்சியம் அளிக்குமாறு சைதை நீதிபதி ஆறுமுகம் நான்கு முறை சம்மன் அனுப்பினார்.

ஆனால், அமைச்சர் இன்பத் தமிழன் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்து வருகிறார்.

இதையடுத்து வரும் 10ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இன்பத்தமிழனுக்கு நீதிபதி ஆறுமுகம் வாரண்ட் பிறப்பித்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கும்உத்தரவிட்டுள்ளார்.

தாமரைக்கனியின் மகனான இன்பத்தமிழன் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் போட்டியிட்டு திமுக சார்பில்போட்டியிட்ட தந்தையைத் தோற்கடித்தார். இதனால் அமைச்சராக்கப்பட்டவர் இன்பத் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடும் தொகுதியின் அதிமுக வேட்பாளருக்கான பொறுப்பாளராகஇன்பத்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கெளண்டர் செய்யும் பொறுப்பை தாமரைக்கனியிடம் திமுகவும், மதிமுகவும்ஒப்படைத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+