விடுதலை ஆனார் கஞ்சா புகழ் ஜனனி
மதுரை:
கஞ்சா வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த ஜனனிக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரை பெண் போலீசார்மிகக் கடுமையாகத் தாக்கி ஒருமுறை ரத்தப் போக்கு ஏற்பட்டது.
அதிலிருந்து மருந்துகளை உட்கொண்டு வருகிறார் ஜனனி. இந் நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு வயிற்று வலிஅதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சிறையில் இருந்து விடுதலையான ஜனனியும் ரமீஜாவும் மதுரையில் தங்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தனர்.அண்டை வீட்டினரைக் கூட அவர்கள் சந்திக்கவில்லை. இந் நிலையில் ஜனனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிரைவரும் வெளியே வந்தார்:
இதற்கிடையே ஜனனி, அவரது தாயார் ரமீஜாவோடு சேர்த்து கைது செய்யப்பட்டு அவர்களது கார் டிரைவர் சதீசுக்கும் ஜாமீனில்கிடைத்துள்ளது.
ஜனனிக்கும் ரமீஜாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந் நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ் ஜாமீன் கோரி மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், மதுரையில் தங்கியிருக்க வேண்டும், தினசரிகருப்பாயூரணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications