இன்று மகாமகம்: கும்பகோணத்தில் 20 லட்சம் பேர் புனித நீராடல் !

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் மகாமகத்தின் முக்கியமான, கடைசி நாள் நிகழ்ச்சியான தீர்த்தவாரி பெருவிழா இன்று நடக்கிறது. சுமார் 20 லட்சம்பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்து மகாமகக் குளத்தில் புனித நீராடினர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல்நேற்று வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந் நிலையில் இன்று மகாமகத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடைபெற்றது.இன்று காலை 10.24 முதல் பகல் 12.16மணி வரையிலுமான காலகட்டத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று மகாமக குளத்தில் புனித நீராடலாம் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே கும்பகோணத்தில் பக்தர்கள் குவிந்தனர். காலையில் காஞ்சி சங்கராச்சாரியார், மதுரைஆதீனம், திருப்பானந்தால், திருவாடுதுறை, தர்மாபுரம் மடங்களின் மடாதிபதிகள் புனித நீராடினர். தொடர்ந்து பிற பக்தர்களும்நீராடி வருகின்றனர். இன்று மட்டும் 20 லட்சம் பேர் அங்கு கூடினர்.

இதையடுத்து 30,000 பேர் கொண்ட குழுக் குழுவாக பக்தர்களைப் பிரித்த போலீசார் அவர்களை அணி, அணி குளத்தில் நீராடச்செய்தனர். ஒவ்வொரு அணிக்கும் நீராட 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

சிவபெருமானைப் போற்றி ஓதுவார்கள் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி கும்பகோணம் நகரம் முழுவதும் சுமார் 19,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு ரயில்கள், ஆயிரக்கணக்கான பேருந்துகள் மூலம் தமிழகத்தின் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்கும்பகோணதில் குவிந்துள்ளனர்.

மகாமகத்தின் 10ம் நாள், இறுதி நிகழ்ச்சியான தீர்த்தவாரியை ஒட்டி, கும்பகோணத்தில் அமைந்துள்ள நாட்டின் ஒரே பிரம்மன்ஆலயத்தில் இன்று பிரம்மோற்சவமும் நடந்தது. கும்பகோணத்தில் உள்ள 12 சிவத் தலங்களின் மூலவர்களும், 5 வைணவத்தலங்களின் மூலவர்களும் மகாமகக் குளத்துக்குக் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

மகம் நட்சத்திரம் உருவானதாகக் கருதப்படும் நல்லூர் சப்த சாகர தீர்த்தத்திலும் பக்தர்கள் புனித நீராடினர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெளர்மணி தினத்தில் குருபகவான் சிம்மராசிக்கு வரும் நிகழ்ச்சியே மகாமகமாககொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மகாமக தீர்த்தவாரி நடந்தபோது கருடனும் குளத்தைச் சுற்றிப் பறந்தது. இதனால் பக்தர்கள்தங்களுக்கு பெருமாளின் ஆசிர்வாதமும் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சியடைந்து ஆனந்தப் பரவசமடைந்தனர்.

மகாமகம் திருவிழா இன்று இரவுடன் முடிவுக்கு வருகிறது.

கடந்த மகாமகத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் பலியானதால், இந்த முறை கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறுசிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவைக் காண கூட்டம்முண்டியடித்ததில் தான் நெரிசல் ஏற்பட்டு சாவுகள் நடந்தன. இதனால் இம்முறை ஜெயலலிதா மகாமகத்துக்கு வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+