கோஷ்டிகள் இல்லாததால் பா.ஜ.கவில் இணைந்தேன்: ராம.சுகந்தன்
சென்னை:
கோஷ்டிகள் ஏதும் இல்லாததாலும், உட்கட்சி ஜனநாயகம் வலுவாக உள்ளதாலும் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்ததாகவாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன்சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் தர்மபுரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் இன்று சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்.பி. சீட்டை எதிர்பார்த்து பா.ஜ.க.வில்இணையவில்லை. காங்கிரஸ் போல அல்லாது, கோஷ்டிகள் ஏதுமின்றி பா.ஜ.க. இயங்கி வருகிறது. அதேபோல, திமுகவில்உள்ளதைப் போன்ற சர்வாதிகாரப் போக்கு இங்கு இல்லை, உட்கட்சி ஜனநாயகம் வலுவாக உள்ளது. இதனால்தான் பா.ஜ.க.வில்இணைந்தேன்.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது தவறானது. ராஜீவ்காந்தி படுகொலையை காங்கிரஸார் இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது எனக்கு வருத்தம் தந்தது.
பா.ஜ.க. சார்பில் நான் எம்.பி தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து தெரியாது. ஆனால் போட்டியிடஉத்தரவிடப்பட்டால் அதை நிச்சயம் ஏற்பேன் என்றார் ராம.சுகந்தன்.
ராம.சுகந்தன் பா.ஜ.க.வில் சேர்ந்தது போல, விரைவில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு முக்கியப் புள்ளி பா.ஜ.க.வில்இணையலாம் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.