தேர்தல் பிரச்சாரம் செய்ய வைகோவுக்கு அனுமதி: நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை
சென்னை:
தேர்தல் பிரச்சாரம் செய்ய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பொடா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கு வசதியாக வரும் மே மாதம் 9ம் தேதி வரை அவர் விசாரணைக்காக தினமும், நேரில் ஆஜராக வேண்டிதில்லை என்றும்பொடா நீதிமன்றம் சலுகை வழங்கியுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள இந்த நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் தளர்த்தியது. ஆனாலும், வழக்கு விசாரணைக்காக தினந்தோறும் பொடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இந் நிலையில் தனக்கு தேர்தல் பணிகள் இருப்பதால், தினமும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி பொடாநீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன்,
வரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வசதியாகதினமும் ஆஜராவதில் இருந்து வைகோ விலக்கு கோரியுள்ளார். வைகோவின் கோரிக்கையில் உள்ள நம்பகத்தன்மையைநீதிமன்றம் ஏற்கிறது.
தனக்குப் பதிலாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற வைகோவின்உறுதிமொழியையும் நீதிமன்றம் ஏற்கிறது.
இதனால் அவருக்கு வரும் மே 9ம் தேதி வரை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 10ம் தேதிமுதல் அவர் தினமும் ஆஜராக வேண்டும்.
அதே நேரத்தில், இடையிலேயே சில நேங்களில் விசாரணைக்காக வைகோ ஆஜராவது அவசியம் என்று நீதிமன்றம் கருதிஉத்தரவு பிறப்பித்தால் அவர் நேரில் வர வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications