For Daily Alerts
Just In
கடலூர்: படகு ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் பலி
கடலூர்
கடலூரில் ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்
கடலூர் அருகே உள்ள தைக்கால் தோனித்துறை கிராமத்திலிருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகு மூலம்சோத்திக்குப்பம் என்ற கிராமத்திற்கு உப்பனாற்றில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று படகு பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கியது. இதில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.மற்றவர்களை அப்பகுதி மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.
தேவானம்பட்டனம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது இந்தபரிதாப சம்பவம் நடந்தது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, March 7, 2004, 5:30 [IST]