"கட்சி தாவி" ஆலடி அருணா கருணாநிதியை விமர்சிப்பதா?: துரைமுருகன் கண்டனம்
சென்னை:
கட்சி தாவுவதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ள ஆலடி அருணா, திமுக தலைவர் கருணாநிதியைசர்வாதிகாரி என்று கூறுவதா என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆலடி அருணா, கருணாநிதியை சர்வாதிகாரி என்று விமர்சித்திருந்தார்.இதற்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியை, ஆளுநரின் கருத்தைக் கேட்காமலேயேதன்னிச்சையாக டிஸ்மிஸ் செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை அழைத்து தனது நூலைவெளியிடச் செய்தார் ஆலடி அருணா. அப்போதே அவரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டார் ஆலடி அருணா.
கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுப்பதை விட தனது சுய லாபத்தை மட்டுமே கணக்கில் பார்ப்பவர் ஆலடிஅருணா. அவர் கருணாநதியை விமர்சிப்பதற்கு எந்தவித தகுதியும் கிடையாது.
1974ம் ஆண்டு திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தால் அதிமுகவில் போய் சேர்ந்தார்.பின்னர் எம்.பி. தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
இப்போதும், சீட் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுகவிலிருந்து கொண்டே பா.ஜ.க. தலைவர்களைப்போய் பார்த்தார், அதன் காரணமாகவே அவரை கட்சியிலிருந்து திமுக நீக்கியுள்ளது என்று கூறியுள்ளார்துரைமுருகன்.