சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் "விளையாடிய" டாக்டர் கைது
மதுரை:
சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு மயக்க ஊசி போட்டுக் கற்பழிப்பது, அவர்களை நிர்வாணப்படுத்தி புகைப்படம்எடுப்பது என செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட ரயில்வே டாக்டரை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜகோபால். இவரது மனைவி லட்சுமி தேவியும்ஒரு டாக்டர்தான். மதுரை ரயில்வே மருத்துவமனையில் டாக்டர் ராஜகோபால் பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் ராஜகோபால் மீது பரிமளா என்ற பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில்,டாக்டரிடம் சிகிச்சை பெறச் சென்ற தன்னை அவர் மயக்க ஊசி போட்டுக் கற்பழித்து விட்டதாகவும், தன்னைஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுபோல பல பெண்களிடம்டாக்டர் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி ஆதாரமாக பல்வேறு புகைப்படங்களையும் கொடுத்தார்பரிமளா.
பரிமளா கொடுத்த புகைப்படங்களில் பல பெண்களை மயக்க நலையில் நிர்வாணப்படுத்தி டாக்டர் புகைப்படம்எடுத்திருந்தது தெரியவந்தது. டாக்டரும், பல பெண்களுடன் காட்சி தருகிறார்.
இதையடுத்து டாக்டர் ராஜகோபால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்த டாக்டர்ராஜகோபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி ஏ.கே.ராஜன்தள்ளுபடி செய்து விட்டார்.இதையடுத்து டாக்டர் ராஜகோபாலை போலீஸார் தேடத் தொடங்கினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அவர் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார்விரைந்து சென்று ராஜகோபாலைக் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டபோது இன்டர்நெட்டில் பெண்களின் ஆபாசப்படங்களைவெளியிட்டதும், ஆபாச விசிடிக்களை புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்து தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது.அதேபோல, டாக்டர் ராஜகோபால் விஷயத்திலும் பல விஷயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.