முன் ஜாமீன் கோரி நடிகர் சரத்குமார் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காசோலை திரும்பி வந்த வழக்கில் சென்னை நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது நடவடிக்கையிலிருந்துதப்பிப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் நடிகர் சரத்குமார்.

நடிகர் சரத்குமார் தனக்கு கொடுத்த ரூ. 30 லட்சத்திற்கான காசோலை திரும்பி வந்து விட்டதாகக் கூறி ரமேஷ்என்பவர் சரத்குமார் மீது சென்னை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தவழக்கில் கடந்த 3ம் தேதி சரத்குமாருக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சரத்குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனதுமனுவில், ரமேஷ் என்பவர் நான் கையெழுத்திட்ட காசோலையை எனக்குத் தெரியாமல் எடுத்து, பெரியஅளவிலான தொகையை நிரப்பி மோசடி செய்துள்ளார்.

என்னிடம் முன்பு வேலை பார்த்தவர்களில் யாரோ ஒருவர் இந்த காசோலையை என்னிடமிருந்து திருடி,ரமேஷுக்குக் கொடுத்து உதவியுள்ளனர்.

எனக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தவறான வழிகளைப் பயன்படுத்தி கைது வாரண்ட் உத்தரவைப்பெற்றுள்ளார் ரமேஷ் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

சரத்குமார் ரூ. 30 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டால் தனது புகாரை வாபஸ் பெறுவதாகக் கடந்த ஆண்டு மார்ச்மாதம் ரமேஷ் கூறியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சரத்குமாருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+